உன் முகம் பார்த்திராத வரை
பேசத் துடிக்கின்றேன்
உன் விழி பார்த்த தருணம்
பேசாமல் ஊமை ஆகின்றேன்
உந்தன் காந்தப் பார்வைதன்னில்
எம் குரல்வளை சிதறுகின்றதோ..!
மலர்களைக் கூடப் பறிக்க
மனமில்லாதவள் நீ
என் மனதை மட்டும்
பறித்துக் கொண்டாயே?
மௌன விரதம் என்கிறாய்
விழிகளால் பேசுகின்றாய்
என்னே சூட்சமக்காரியடி நீ ?